Teeratha ViLaiyaattu Pillai (Part 2)
- Uma Shankari
- Mar 15, 2024
- 1 min read
Updated: Sep 11
போன பதிவில் பாரதியாரின் "தீராத விளையாட்டு பிள்ளை" என்ற கவிதையின் முன்னோட்டத்துடன் பல்லவியும் கற்றுக் கொண்டோம். இந்த பகுதியில் தொடர்ந்து நாம் முன்பு கற்றுக்கொண்டதை மறுபார்வை செய்து பின்னர் தொடர்வோம்.
இனி மீதமுள்ள சரணமும் முழு பாட்டின் revision-ம் கண்டு மகிழலாம்.
ராகம்: ஷண்முகப்ரியா
பின்னலைப் பின்னின் றிழுப்பான் தலை பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான் வண்ணப் புதுச்சேலை தனிலே புழுதி வாரிச் சொரிந்து வருத்திக் குலைப்பான். (தீராத)
ராகம்: மாண்டு
புல்லாங் குழல்கொண்டு வருவான் அமுது பொங்கித் ததும்பு நற் கீதம் படிப்பான், கள்ளால் மயங்குவது போலே - அதனை கண்மூடி வாய் திறந்தே கேட் டிருப்போம். (தீராத)
கீழே காணும் ஒலிப்பதிவில் நித்யஸ்ரீ மஹாதேவனின் குரலில் இந்த பாட்டை கேட்டு ரசிக்கலாம்.
Comments